உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிஞர் அண்ணா



நீதி : இரக்கம் என்றால் பிறருடைய நிலைமை கண்டு,
      வேதனையைக் கண்டு பரிதாபப்படுவது, மனம்
      இளகுவது,இளகி அவர்களுக்கு இதம் செய்வது...

கம் : இதம் செய்யாவிட்டாலும் போகிறது; இன்னல்
      செய்யாமலாவது இருப்பது...

இரா: அதாவது–தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய
      முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த
      ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான்.
      அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ தடுக்கவோ
      முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான,
      உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம்
      உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது,
      கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது
      – இது தானே இரக்கம்?

கம் : மகா பண்டிதனல்லவா! அருமையான வியாக்யானம்
      செய்துவிட்டாய், இரக்கம் என்ற தத்துவத்திற்கு.

இரா : தாகவிடாயால் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு
      புள்ளிமான். அடவியிலே நீர் தேடி அலைகிறது... அந்த
      நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது.
      மான் மிரள்கிறது; சிறுத்தை அதன் நிலை கண்டு மனம்
      இளகி, 'பாவம்! இந்த மானைக் கொல்லலாகாது' என்று
      தீர்மானித்து, இரக்கப்பட்டு, மானை அருகாமையிலுள்ள
      நீர் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அது நீர் பருகும்
      போது வேறு துஷ்ட மிருகத்தால் ஒரு தீங்கும் நேரிடாதபடி
      காத்துக் கொண்டிருக்கிறது. அதுதானே இரக்கம்.?

கம் : சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத்தியமா என்பது
      வேறு விஷயம்.

இரா : மானை அம்பு எய்திக் கொல்ல வருகிறான் வேடன்...
      வேடனுக்கு இரக்கத்தின் மேன்மையை எடுத்துக் கூறி
      தவசி தடுக்கப் பார்க்கிறார். வேடன் என்ன செய்வான்?