38
அறிஞர் அண்ணா
என்ற தர்மத்தைக் காப்பற்றவே, நான் இந்தக்
கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது.
அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல
நான்.
சம் : யோசியாமல் பொய் பேசுகிறாய் – இராமா! கூசாது
பேசுகிறாய். உன் ஆட்சியிலே, சிலருக்குத் தவம்
செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத்
தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி
என்கிறாய்.
இரா : தர்மம் – நானும் மீற முடியாத தர்மம்.
சம் : இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும்
என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக்
கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர்
என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம்
செய்தனர். – இராவணனே,பெரிய தவசி! அரக்கர்
தலைவர்களெல்லாம், தவம் பல செய்து, வரம் பல
பெற்றவர்கள். ஆகவே அவர்களும், தவம் என்றாலே
வெறுத்து அழித்தவர்களல்ல – தவம் நாங்கள்
செய்யலாம் – ஆரியர் செய்யலாகாது என்றனர். –
அழித்தனர் – நீயும், இங்கு ஆரியர் தவம் புரியலாம்,
அநாரியனான நான் புரிதல் தகாது, தலையை
வெட்டுவேன் என்கிறாய் இலங்கையான் செய்தால்
பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச்
செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தர்மம்! இராமா!
எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசிலே
வாழ்கிறோமே என்று – சீக்கிரம், என் தலையை
வெட்டிவிடும்.
[வாதம் முடிந்தது, இராமனின் தண்டனை கிடைத்தது,
வரம் வேண்டி தவம் செய்த சம்புகனுக்கு அவன் தலை
தரையில் உருண்டது.]
இராமன், தவச்சாலையை விட்டு நீங்கினான்.
இரத்தம் ஒழுகும் தலை! துடித்துத் துவண்ட உடல்!
காக்கை, கழுகுகள் வட்டமிடலாயின.
வழிப்போக்கர்கள், இந்தக் கோரக் காட்சியைக்
கண்டனர். அலறினர்.