உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அறிஞர் அண்ணா


           என்ற தர்மத்தைக் காப்பற்றவே, நான் இந்தக்
           கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது.
           அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல
           நான்.

சம் : யோசியாமல் பொய் பேசுகிறாய் – இராமா! கூசாது
      பேசுகிறாய். உன் ஆட்சியிலே, சிலருக்குத் தவம்
      செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத்
      தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி
      என்கிறாய்.
      
இரா : தர்மம் – நானும் மீற முடியாத தர்மம்.

சம் : இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும்
      என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக்
      கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர்
      என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம்
      செய்தனர். – இராவணனே,பெரிய தவசி! அரக்கர்
      தலைவர்களெல்லாம், தவம் பல செய்து, வரம் பல
      பெற்றவர்கள். ஆகவே அவர்களும், தவம் என்றாலே
      வெறுத்து அழித்தவர்களல்ல – தவம் நாங்கள்
      செய்யலாம் – ஆரியர் செய்யலாகாது என்றனர். –
      அழித்தனர் – நீயும், இங்கு ஆரியர் தவம் புரியலாம்,
      அநாரியனான நான் புரிதல் தகாது, தலையை
      வெட்டுவேன் என்கிறாய் இலங்கையான் செய்தால்
      பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச்
      செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தர்மம்! இராமா!
      எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசிலே
      வாழ்கிறோமே என்று – சீக்கிரம், என் தலையை
      வெட்டிவிடும்.

      [வாதம் முடிந்தது, இராமனின் தண்டனை கிடைத்தது,
      வரம் வேண்டி தவம் செய்த சம்புகனுக்கு அவன் தலை
      தரையில் உருண்டது.]
 
      இராமன், தவச்சாலையை விட்டு நீங்கினான்.

      இரத்தம் ஒழுகும் தலை! துடித்துத் துவண்ட உடல்!
      காக்கை, கழுகுகள் வட்டமிடலாயின.
      வழிப்போக்கர்கள், இந்தக் கோரக் காட்சியைக்
      கண்டனர். அலறினர்.