உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே! உருவத்தால் அண்ணன் நம்மிடையே உலவிடவில்லை எனினும் நம் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்து நம்மைத் தலைமையேற்று வழி நடத்துகிறார் என்ற உத்வேகத்தோடு மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை இருநூறு கிலோ மீட்டர் தொலைவு எட்டு நாட்கள்-நீதி கேட்டு நெடிய பயணத்தை அவரைத் தொழுதேத்தித் தொடர்ந்திட்டோம்! இன்று நேற்றல்ல அறுபது ஆண்டுகளுக்கு மேலாகவே - ஆயிரங் காலத்துப் பயிராம் நமது பேரியக்கம் அரசியல் துறையில்- சமுதாயத் துறையில்- பொருளாதாரத் துறையில் நீதி கேட்டு நெடிய பயணத்தை; கொடிய எதிர்ப்புக்களுக்கிடையே நடத்திக் கொண்டு தானிருக்கிறது!....... இது நமது வரலாற்றில் மாப்புகழ் படைத்த-மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி! பார் சிறுத்ததால் படை பெருத்ததோ- படை பெருத்ததால் பார் சிறுத்ததோ- என்று வியப்புறும் வண்ணம் பாண்டியன் தலைநகரில் உதய சூரியனின் ஒளிக்கதிர்களென