பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

போல் செக்கச் செவேலென்று பழுத்து அது எவ்வளவு அழகாகத் தொங்குகிறது பார்!” என்று அவள் சொன்னாள்.

தன் தங்கை பசியோடு இருந்தபடியால், சின்ன இளவரசன் மரத்தின் மேல் ஏறி அந்த மாம்பழத்தைப் பறித்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். ஆனால், அதை அவள் கடிக்கப் போகும் போது, ஒரு பறவை பறந்து வந்து இளவரசனுடைய தோளிலே உட்கார்ந்தது. “சின்ன இளவரசியே! அதுதான் ஆடுகின்ற மாம்பழம். அதைத் தின்னாதே, உங்களை கடலில் துக்கியெறிந்த கொடியவளை அந்த மாம்பழம் தான் காட்டிக் கொடுக்கப் போகிறது. அப்போது நான் உண்மையைச் சொல்லுவேன். அதுவரை நடந்து கொண்டேயிருங்கள். கடைசியில் நீங்கள் ஒரு கோட்டை சூழ்ந்த அரண்மனைக்குப் போய்ச் சேருவீர்கள். அங்கே போனவுடன் பிச்சை கேளுங்கள்!” என்று சொன்னது பறவை. அது தான் உண்மை அறிந்துரைக்கும் பறவை.

இளவரசனும், இளவரசியும் ஆடுகின்ற மாம்பழத்தையும் உண்மை அறிந்துரைக்கும் பறவையையும் எடுத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். கடைசியில் அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ராஜா தேவப்பிரியனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அரண்மனை கோட்டை வாசலில் வந்து நின்று அவர்கள் பிச்சை கேட்டார்கள்.

"இரண்டு சிறு குழந்தைகள் வாசலில் பிச்சை கேட்கிறார்கள்" என்று சேவகர்கள் ஓடிவந்து ராஜாவிடம் கூறினார்கள்.

"அவர்களுக்கு வேண்டிய உணவு எல்லாவற்றையும் கொடுங்கள்” என்று ராஜா தேவப்பிரியன் கட்டளையிட்டான்.