பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைந்து மகிழ்கிறேன் பெரும்பள்ளி பழம்பள்ளி பேர்பெற்ற ஆசான்மார் கரும்பள்ளித் தருவதெனக் கற்பார்க்குக் கல்விநலம் தரும்பள்ளி உயர்பள்ளி தனதுழைப்பால் மேல்நிலைக்கு வரும்பள்ளி வளர்பள்ளி மேன்மேலும் வாழியவே! தமிழியலில் நல்லறிஞன் தமிழண்ணல் எனும்பெயரான் அமிழ்தினிய பாமணியன் ஆ. பழநி எனுமன்பன் துமியளவுங் கடன்பிறழாத் தூயமுத்து சம்பந்தன் தமைமறந்து தமிழ்சொல்லத் தானுயர்ந்த எம் பள்ளி! மீனாட்சி சுந்தரப்பேர் மேவியனம் பள்ளிதனில் தானாட்சி செய்துவரும் தாளாளர் தகவென்னே! நானாட்சி செயக்கல்வி நயமுணர்ந்தார் o அன்பென்னே! தேனாட்சிக் காலமது சிந்தித்து மகிழ்கின்றேன். கவியரசர் முடியரசன் 0 19