பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைதுயர் தூக்கு மேடை செக்கடித் தொல்லை கண்டு வெருவுது மாகில் நாடு விடுதலை பெறுவ தெங்கே? வாழ்விலும் அலைகள் உண்டு; வருமிடர் பலவும் உண்டு; வீழ்வுறும் சரிவும் உண்டு; விழுங்கிடும் சுறவும் உண்டு; பாழ்படும் இவற்றைக் கண்டு பதறிடா தெதிர்த்து நின்று தாழ்வுறாத் துணிவை நம்பித் தலைப்படின் இன்பங் காண்பாய். தனதுளத் துணிவை நம்பித் தாழ்விலா முயற்சி கொண்டான் வினையிடை ஊழைக் கூட வென்றிட வல்லான் என்று மனவளப் புலவன் சொன்னான்; மற்றிதை மறுப்பா ரில்லை; உனையினி நம்பு; வாழ்வில் உயர்வது திண்ண மிங்கே! (30–1–1980) 3.4 D நெஞ்சிற் பூத்தவை