பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடைப்பளி மேற்புறம் மன்னவன் எனக்குத் தனிவழி அமைப்பர் தலைநிமிர்ந் தேகுவேன் எனைவழி மறித்திட எவரால் இயலும்? குடில்களில் வேய்ந்த கூரைகள் ஓடுகள் தடைசெயின் அவற்றிடைத் தப்பிப் புகுந்து வெளிவரு வேன்.எனை விஞ்சியோர் எவருளர்? என்றும் சான்றோர் எண்ணம் போல நின்றுமேல் நோக்கி நிமிர்ந்தெழும் இயல்பினேன்; தடுத்துப் பிடித்துத் தடைசெயச் சிறைசெய எடுத்திடும் முயற்சிகள் என்னிடம் தோற்கும்; புகுதற் கியலாப் புல்லிய இடத்தும் புகலால் என்பெயர் புகைஎனப் புகல்வர்! நல்லியல் மாதர் “நடுவினை நிகர்த்திடும் மெல்லிய உருவில் மேவுவேன் எனினும் பல்வகை ஆலையில் பருத்துள குழாயில் விக்கிர மாதித்தன் வேதா ளம்போல் உக்கிர மான உருவொடு வருவேன்; மணம்படு பொருளிலும் மயங்கிநான் எழுவேன்; பிணம்சுடு காட்டிலும் பேருலா வருவேன்; ஆண்டியின் கையிலும் அடங்கி யிருப்பேன்; ஆண்டவன் முன்னரும் அடைக்கலம் புகுவேன்; சிறுகுடில் ஆகினும் வளமனை யாகினும் சிறியவன் எனக்குச் சிறப்பிடம் உண்டு; நெருப்பின்றிப் புகையா நிலையினை உணர்வீர் சிறப்புறும் என்புகழ் செப்பினேன் உமக்கே! ("நடு-இடை) (24–10–1984) கவியரசர் முடியரசன் 0 39