உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்ணே; அடிவயிற்றிலிருந்து குமட்டுதண்ணே" என்று நாங்கள் பாடவில்லை. அகத்தின் அழகை முகத்தில் காட்டாமல் இருக்க முடியவில்லை. சோற்று உருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டுச் சட்டிகளைக் கழுவி வைத்து விட்டு-முப்பத்தாறு பேரும் அணி வகுத்தோம்; நாலு நாலு பேராக! பிறகு பழையபடி கூண்டுகளில் அடைக்கப்பட்டோம். எங்கள் ‘கல்கத்தா இருட்டறை'யில் எட்டுப் பேர்! இரவு வந்தது. இரண்டு நாள் சரியான உணவு இல்லாத எங்களுக்குத் தூக்கமாவது வந்ததா? அதுவுமில்லை! வந்தால் தான் படுப்பதற்கு படுப்பதற்கு இடமேது! பூச்சிகள் வந்தன. கொசுக்கள் வந்தன. வராதவைகளில் முக்கியமான ஒன்று காற்று-எட்டுப் பேர்-வியர்வையோ கொட்டுகிறது-சட்டையைக் கழற்றினால் கொசுவோ துளைக்கிறது! மூலையில் உட்கார்ந்து தூங்கினர் மூவர்! வேணு, ரத்தினம், எத்திராஜ்! ஆபாசமாயிருந்த பகுதியில் காலை மட்டும் நீட்டிக்கொண்டு உடலைப் புழுப்போல் சுருட்டிக் கொண்டார் சத்தி. அவர் கால் புறத்திலே தலையை வைத்து வளைந்து கிடந்தார் கஸ்தூரி. கலங்கிய கண்களுடனே இராம சுப்பையா என்னைப் பார்த்து. "என் மடியில் சாய்ந்து கொள்ளுங்கள்" என்றார். முயன்றேன், முடியவில்லை. பிறகு ஒரு வழி கண்டு பிடித்தேன். காற்றும் லேசாக வரும். உடம்பையும் உருட்டாமல் இருக்கலாம் என்ற எண்ணத்துடன் சிறைக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்கினேன். இரவு இரண்டு மணி இருக்கலாம். சரியாகத்தான் நேரம் தெரிய முடியாதே! டிப்டி சூப்பரின்டெண்டெண்ட் வந்தார். "ஏன் நிற்கிறீர்கள். தூங்க வில்லையா?" என்றார். பரவாயில்லை" என்றேன். போய் விட்டார். எப்படியோ வாழ்க்கையிலே அதுவரையில் தொட்டறியாத கஷ்டத்தை அந்த இரவு வேளையில் அரியலூர் சிறையில் அனுபவித்தோம். படாத பாடுபட்டு இரவை நகர்த்தினோம் காலையிலே அரிசிக் கஞ்சி கொடுத்தார்கள். குடலைக் காய விடாமல் பார்த்துக் கொண்டோம்: மறுபடியும் அடைத்து விட்டார்கள். அன்றைய தினம் ஜூலை 17-ஆம் தேதி! சென்னை மறியலிலே அருப்புக் கோட்டை தந்த வீரர் கவிஞர் எம். எஸ். ராமசாமி அவர்கள் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். கல்லக்குடியிலே தாக்குண்டு வைத்தியசாலையிலிருந்த கவிஞர் கண்ணதாசனும் கைது செய்யப்பட்டார். 211