உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபற்றி விவரமறிய! கலகக்கார நாரதன் என்னை அழைத்துக் கொண்டு ஓடினான். பள்ளி மாணவர் சங்க ஆண்டு விழாவில் 'துருவன்' நாடகம். அதில் இந்திரனாக நடிக்க இருந்த பையனுக்கு நாடகத்தன்று திடீரெனக் கடுமையான காய்ச்சல்! வேறு வழியில்லை! பழைய மாணவனாகிய நான் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளானேன். இந்திரனுக்குரிய வசனங்களை நானே எழுதிக்கொண்டேன். வசனங்கள் எல்லாமே 'குடியரசு' வாடைதான். நாரதர் என்னைப் பார்த்து, "ஹே இந்திரா! பூலோகத்தில் ஒரே குழப்பம்! நீ இந்திராணியோடு கொட்டமடிக்கிறாய். இதுதான் உன் ராஜ்ய பரிபாலனத்துக்கு அழகோ!" என்று ஆத்திரத்தோடு கேட்டார். உடனே இந்திரன், "ஆமாம், இதுதான் என் ராஜ்ய பரி பாலனத்தின் அழகு, இலக்கணம், எல்லாமே! நான் இந்திராணியோடு கொட்டமடிக்காமல் வேறு யாரோடு கொட்டம் அடிப்பேன்? அகல்யா விடம் கொஞ்சியதற்குத்தான் உடம்பெல்லாம் கண்களாகிப் போகுமாறு சாபம் பெற்றுவிட்டேன். ஒரு கண் இரண்டு கண் இருக்கும் தேவர்களே காதல் வியாதியால் கஷ்டப்படும்போது ஆயிரங் கண்ணுடைய நான் என்ன செய்வேன்? ஏனய்யா நாரதரே! எனக்குத் தான் ஆயிரம் கண்கள்; காளிதேவியையும் ஆயிரங் கண்ணுடையாள் என்கிறார்களே- அவளுக்கும் என்னைப் போல் ஏதாவது சாபந்தானோ?' என்று பதில் கூறுவான். இப்படியொரு புதுமையான இந்திர வேஷத்தைப் போட்டுக்கொண்டேன். அந்த நாடகத்தில் துருவனுடைய தம்பியாக நடித்த பால' நடிகன் யார் தெரியுமா? என் கண்களின் கருமணியாய் விளங்குகின்ற செல்வ மருமகன், முரசொலி மாறன்தான்! துருவனைப் பார்த்து, 'ஏய் துதுவா, நான் யார் தெரியுமா? எங்கப்பா மதியில் நீ உக்காதக் கூதாது!" என்று பேசிய மழலை மொழியை நான் இன்னும் மறக்கவில்லை. இப்போதும் சமயத்தில் நான் அதைச் சொல்லி வீட்டில் அவனைக் கேலி செய்யும்போது மணமகளைப் போல் நாணிக் கோணி ஓடிவிடுவான்! நாள் துருவன் நாடகம் முடிந்து பதினைந்து நாள் கழித்து என் பள்ளித் தேர்வு முடிவு கிராமத்தை நோக்கி எட்டிப் பார்த்தது. காலையிலே தினசரிப் பத்திரிகையில் செய்தி வரப்போகிறது. முதல் மாலையிலேயே எனக்குச் செய்தி கிடைத்துவிட்டது. தோல்விதான் என்று! யாரிடமும் விஷயத்தைக் கூறவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குத் திண்ணைக்குப் பாயை எடுத்துக்கொண்டு வந்தேன். "என்றைக்குமில்லாமல் இன்றைக்கென்ன திண்ணையில் படுக்கை?" என அம்மாவும் அப்பாவும் விசாரித்தார்கள். சமாளித்தேன். அப்பாவும் 58