உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" நமக்குப் பண நெருக்கடி எவ்வளவு அழுத்தமாக இருந்த போதி லும் பொதுப் பணி அமைச்சர் மு. கருணாநிதி வந்து அணுகிய நேரத் தில் அவர் தாம் மேற்கொண்ட பணியை முடித்திட எப்படி அணுகுவார். என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். தாவிரி நீர்த் திட்டத் துக்காக அவர் அவர் என்னை அணுகிய நேரத்தில் தயக்கம் காட்டாது அதற்கான நிதியை ஒதுக்கித் தரும் மகிழ்ச்சியான நிலையே எனக்கு ஏற்பட்டது.'" பொதுமக்களின் துயரினைத் துடைத்துத் தேவைகளை நிறை வேற்றிடத் தி.மு. கழக அரசு எத்துணை ஆர்வத்துடன் செயலாற்ற முற்பட்டது என்பதை எடுத்துக் காட்டிடவே வீராணம் காவிரி நீர்த் திட்டம் பற்றியும் இங்கே குறிப்பிட விழைந்தேன். அமைச்சராக நான் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஒதுக்கப் பட்டு இருந்த துறைகளைப் பொறுத்த மட்டில் உருவாக்கப்பட்ட ஒரு சில முக்கியத் திட்டங்களை - எடுக்கப்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை- மட்டுமே மேலே குறிப்பிட்டேன். -