நெஞ்சுக்கு நீதி 151 இடம் பெற்றபோது, கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் ஒரு வரான "என்.வி.என்." என்று அனைவராலும் அன்போடு அழைக் கப்பட்ட என். வி. நடராசன் அவர்கள் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், கவிஞர் வேழவேந்தன் அவர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள். அண்ணா அவர்களுடைய அமைச்சரவையிலேயே என்.வி. என். அவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் கழகத்தினரிடத்திலே பலமாக வேரூன்றியிருந்தது. அதனை நிறை வேற்றும் வகையிலும் என். வி. என். அவர்களுக்கு என்னுடைய அன்பினையும், மரியாதையையும் காட்டவேண்டும் என்ற வகை யிலும் அவரை எனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டேன். இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் தேர்தலையொட்டி கழகத்தில் நல்லதோர் ஒற்றுமை அரும்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகள் காங்கிரசை எப்படி பிளவுபடுத்தியது என்பதை அடுத்துக் காண்போம்.
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/171
Appearance