உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 471 வெளிநாட்டார் பகையிலிருந்து நாட்டை மீட்க அணி திரண்டு நின்றவர்களை யெல்லாம், இன்று உள் நாட்டைப் பாதுகாக்கிறேன் என்ற என்ற பெயரால் பெயரால் சிறைக் கொட்டடிகளில் தள்ளியிருக்கிறார். இந்திய மண்ணின் விடுதலைக்காக தியாகத் தழும்புகளை ஏற்ற பழம்பெரும் தேசபக்தர்கள், கைதிகள் என்ற பரிசினை, இந்திரா ஆட்சியில் பெற்றிருக்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியின் போதும் இல்லாத கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேசத் தலைவர்களின் மீது ஏவி விடப்பட்டுள்ள அடக்குமுறை கண்டு நாடு குமுறி எழுந்துள்ளது. எல்லா செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டன. அப்படியொரு சட்டம் பாய்ந்துள்ளது இப்போது! வையம் புகழ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூட வானொலி வெளியிடவில்லை. 'சிலர் கைது’ என்று கூறி, கூறி, நாட்டின் நாயகர்களை நபர்களில் சிலராக வானொலி வர்ணிக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட பிறகே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வரவேண்டுமாம். முறை விடுதலை பெற்ற இந்தியாவில், எத்தனையோ எதிர்க்கட்சிகளின் எழுச்சி மிக்க கிளர்ச்சிகள் எரிமலைகளாக வெடித்திருக்கின்றன. அப்போதெல்லாம், ஜவகர் காலத்திலோ, லால்பகதூர் காலத்திலோ, பாயாத உள் நாட்டுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், இன்று முதன்முறையாகப் பாய்வானேன். சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத முறையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதி காரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவை தானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றது தானா? இவைகளையெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் சிந்தித்துப் பார்த்து, நேற்றைய அவசர காலப் பிரகடனத்தினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்திட முன்வரவேண்டும். பத்திரிகையாளர்களின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டு பத்திரிகைகளுக்குரிய நியாயமான உரிமைகளைத் தடையின்றி