பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கண்கவர் எழிலைப் பாரான் கல்வியின் பெருமை காணான் பெண்மகள் குணத்தை நோக்கான் பிறவுயர் பண்பும் நோக்கான் உண்மையில் மனப்பொ. ருத்தம் உள்ளதா எனவும் எண்ணான் பொன்பொருள் மட்டுந் தானே புன்மகன் நோக்கு கின்றான் ! திட்டங்கள் பலவு ரைத்தோம் செயலிலே பயனே இல்லை சட்டங்கள் பலவுஞ் செய்தோம் தப்புகள் அகல வில்லை தட்டுங்கை யோசைக் காகத் தடபுடல் மேடைப் பேச்சு மட்டுந்தான் கானு கின்றோம் மற்றவர் வீட்டிற் கானோம். எத்தனைப் பெண்கள் தாமே சாவினை ஏற்றுக் கொண்டார் ! எத்தனைப் பெண்கள் வாழ்வில் இடறிவிழ்ந் துழலு கின்றார்! இத்தனைக் கொடுமை கண்டும் இர க்கமே தோன்ற வில்லை! பித்தளை வெள்ளி தங்கம் கற்பினிற் பேசு கின்றான்!