பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

11


 

3. ஈகை


 

முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் வாழ்வில் நடந்த சிறு சம்பவம் தான் இது. மோதிலால் நேரு தலைசிறந்த சட்ட நிபுணர். வாதாடுவதில் மிகவும் வல்லவர். புத்திக் கூர்மை மிக்கவரும் கூட.

ஒருநாள் காலை, அலுவலகத்திற்குச் செல்ல வெளியே வந்தபோது அவரைப் பார்க்கக் காத்திருந்த ஓர் ஏழை மனிதன் அவரை வணங்கினான். மோதிலால் நேரு “யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு” என அன்புடன் வினவினார்.