பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

67


 

12. அரசனும் அறிஞனும்


 

ந்தக் கதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. ஆசியாக் கண்டத்தில் ‘லிடியா’ என்ற பிரதேசத்தின் ஒரு பகுதியை ‘குரேசஸ்’ என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனிடத்தில் இருந்த அளவு 'தங்கச் சேமிப்பு' உலகத்தில் வேறு யார் ஒருவரிடமும் இருக்கவில்லை. அவனுடைய நாட்டில் இருந்த மலை ஒன்றிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த ஒரு சிற்றாற்று நீரில், மண்ணும் மணலும் கலந்தவாறு மிக அதிகமாகத் தங்க துகள்களும் கிடைத்து வந்தன. கணக்கற்ற மக்கள் கூலி வாழ்வுக்காக அந்தத் தங்கத் துகள்களைச்