பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 2

"என் கடன் பணி செய்து கிடப்பதே!

என் தமிழ்ப்பணி

புலவர் கா. கோவிந்தன்

1932: செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர் திருவாளர், மகாவித்வான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானுகவியார் என்ற பெரும்புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த அருட்பா மருட்பா வாதத்தில் அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மை யாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீஸ்வரர், தி ரு ஞ ண ன சம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாகப் பாடப்பெற்ற பெருமைக்குரிய பெருமான். அவர் துணைவியார் பாலகுஜாம்பிகையார். அந்த அம்மையார் மீது 'இளமுலை நாயகி பிள்ளைத் தமிழ்' என்றபொருள் செறிந்த நூலைப்பாடியவர் பானு கவியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகவியாரை வாதத்தில் வென்றவர் திரு. வீரபத்திரப் பிள்ளை அவர்கள்.

அவர் வேலூரில், இ ன் று. வெங்கடேசுவரா மேல் நிலைப்பள்ளி என அழைக்கப்பெறும் அன்றைய பூரீமகந்த தேவஸ்தான்் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுவிட்டார். அவர் இடத்திற்குக் காவேரிப்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில்

  • புலவர் அவர்கள் கடைசியாக எழுதிய கட்டுரை.

105