பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓராண்டு கழிந்தது: 1936இல் முதலாண்டுவிழா நடத்த முடிவுசெய்தோம். விழாத் த ைல ைம க் கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்குக் கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண்பொற் காசுகள் (அதாவது ரூபாய்) தரவேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்கவேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.

எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக்கொண்டு அடிகளார் மாளிகைசென்று ஒரு தட்டுவாங்கி, அ. தி ல் இவற்றை வைத்து எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் கொடுத்துவிட்டுக் காலில் வீ ழ் ந் து வணங்கினேன். (நான் வணங்கிய முதல்வர் அவர்தான்்)

வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு : யார்? வந்தது ஏன் என வினவினார்; அழைக்க வந்தேன் என்றேன். ஒளவைக்குக் கடிதம் எழுதிவிட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக்காசுகள் தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்கவேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஒப்புக்கொண்டார்.

1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம் எங்கள் தெருவில், கோயிலை அடுத்ததெருவில், அவருக்காகப் பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.

112