பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அ ம ர ர் சுப்பையாபிள்ளை அவர்கள் சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில் 22-2-42இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் பாலை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.

அம்மாநாட்டினைத் .ெ த ர ட ர் ந் து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார். 'திருமாவளவன்’ என்ற முதல் நூல் 1951இல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் தி ரு மா வ ள வ ன் என்பது குறிப்பிடல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்ககாலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையில் முதல் நூல் 1952லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன.

தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு, எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டாளர் மூலம் ால நூல்கள் வெளிவந்தன. அரசியல் பணிகளுக்கிடையே கால்டுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959-ல் வள்ளுவர் பண்னை மூலம் வெளிவந்தது.

114