இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. புதிய கண்டுபிடிப்புகள்
குரிலிசிற்கு (Kuries) அருகே, பசிபிக் கடலில் வடமேற்கே மூடுபனியும் புயலும் நிலவும் பகுதியில் சோவியத்து விட்யாஸ் கப்பல் ஆராய்ச்சி நடத்தியது. கடலின்கண் உயிர்ப்பரவலில் உள்ள ஒழுங்கினைக் கண்டறிய இவ்வாராய்ச்சி நடைபெற்றது. கடலின் மேற்பரப்பிலிருந்து கீழ் 9 கி. மீ. அளவுக்கு மேலும் ஆராய்ச்சி நடைபெற்றது. இவ்வாராய்ச்சியினால் வெளியாகியுள்ள உண்மைகளாவன:
1) | இக்கடலின் ஆழங்களில் வியத்தகு விலங்குலகம் உள்ளது. இது முழுக்க முழுக்க இருண்டது, குளிர்ச்சி மிக்கது. இங்கு உணவு அருகிக் காணப்படுகிறது. | |
---|---|---|
2) | 1000 காற்று வெளி அளவுக்கு அழுத்தம். உள்ளது. | |
3) | நாம் நினைத்ததற்கு மாறாக 8,000 மீட்டர் ஆழத்திலும் உயிர்கள் வாழ்கின்றன. | |
4) | படிவுகள் தோன்றல், வேதிப் பொருள் இடமாற்றம் அடைதல் ஆகிய நிகழ்ச்சிகளில் ஆழ்கடல் விலங்குகளுக்குச் சிறந்த பங்குண்டு. | |
5) | வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் வாழ, இந்த ஆழ்கடல் உயிர்கள் தகைவாற்றல் பெற்றுள்ளன. | |
6) | இவ்வராய்ச்சியினால் சில விலங்குகள் தோன்றிய முறையினை அறிய மிகப் பயனுள்ள செயதிகள் கிடைத்துள்ளன. |