பக்கம்:பச்சைக்கனவு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O. 107

புனர்ப்பாகமா, சாதமா-எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர் முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடி யேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது.

சில சமயங்களில் அம்மா அப்பா இரண்டு பேருமே மேலேபோய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில் 'சடக் கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம் கூடச் சற்று. நெகிழ்கிறது.

'என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?’’

எனக்கே தெரிந்தால்தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப்போச்சு. கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என். கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடந்து செல் கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்: w

"பரவாயில்லை பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.”

அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன்றிற்று, அவ்வளவுதான். இந்த சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்ததால், மேலிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/116&oldid=590774" இலிருந்து மீள்விக்கப்பட்டது