பக்கம்:பச்சைக்கனவு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி C 163

விழுந்தது. இருவரும் அதை எடுக்கக் குனிந்து முட்டிக் கொண்டனர். அவன் கையில் தான் அது அகப்பட்டது. அது என்ன என்று அவனுக்கு அப்போதே தெரிந்து விட்டது.

ஒரு புகைப்படம். காயிதப்பூவைத்த ஒரு மேஜை விளிம்பைப் பிடித்து நின்று கொண்டு ஒரு ஸ்திரி புன் முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தாள். கண்களில் ஒரு தனி அசதி, உடலிலேயே நீர் வைத்தாற்போல் ஒரு சிறு ஊதல். கர்ப்பிணி.

"யாரது?’’

மனமில்லாத பதில் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டது.

என் மனைவி.'

ஒ!'

அவர்களிடையில் தேங்கிய மெளனத்தில் ஸ்புடமானாற் போல அந்தப் படம், அவனுக்குக் கையில் ஏந்திய தணல் போலாகிவிட்டது அதை வைக்க இடம் கிடைக்காது தவித்தான். கடைசியில், அங்கு மாட்டியிருந்த கோட்டுப் பையுள் திணித்தான். அவன் உள்ளங்கையில் வேர்வை பிசுபிசுத்தது. அந்தச் சமயம் அவன் முதல் மனைவியை எவ்வளவு பயங்கரமாக வெறுத்தான்!

அவள் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். ஆயினும் அவளுடைய வெறிச்சிட்ட நோக்கிலேயே தெரிந்தது. அவளுக்கு ஒரு எழுத்தில் கூடக் கவனம் அழுந்த வில்லை. ஆயினும் மனத்தின் அவஸ்தையை மறைக்க செயல் அவசியமாயிருக்கிறதே! அவன் போய் ஜன்னலண்டை நின்றான்.

"என்ன ஒரு மாதிரியாயிருக்கிறாய்?"

யார்? நானா?”

அவனுக்கு மூச்சு சற்றுத் திணறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/172&oldid=590830" இலிருந்து மீள்விக்கப்பட்டது