பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 (4) பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள், பாசனக் கட்டு மதகுகளில் எந்தவித மாற்றங்களேச் செய்யவோ அல்லது, அத்தகைய பாசனக் கட்டு சம்பந்தமாய் ஏரி புனரமைப்புத் திட்டக் குறிப்பீடுகளில் சொல்லியுள்ள ஸ்டாண்டர்டு, குறிப்புகள் ஆகியவற்றில் ஈடுபடவோ அல்லது மதகுகள் கலிங்குகள் இவற்றை உயர்த்தவோ, இறக்கவோ அல்லது விரிவாக்கவோ வாய்க்காவின் தலைக்கட்டு வேலேயில் முக்கிய மான மாற்றங்களேச் செய்யவோ அல்லது தலேயிடவோ கூடாது. - (5) பஞ்சாயத்து யூனியன் மன்றம், மழைகாலங்களில் பாசனக்கட்டுக் கரைகளில் காவல் வைத்து, அவற்றை கண்காணிப்புச் செய்து வரவேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும். (6) பாசனக் கட்டு வேலேயில் அடங்கிய அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட மதகுகள், கலிங்குகள், வாய்க் கால்கள், தலைக்கட்டு, கரை உயர்த்தும் வேலேகள் ஆகிய வற்றில் தவருகச் செய்தால் அல்லது செய்ய முடியாததால் ஏற்பட்ட சேதாரங்களுக்கு பஞ்சாயத்து யூனியன் மன்றமே ஈடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஏதாவது ஒரு இனத்தின் விஷயமாய் ஏற்பட்ட சேதாரம், பஞ்சாயத்து யூனியன் மன்றம் தவருகச் செய்ததால் அல்லது செய்யாததால் ஏற்பட்டதா என்பது குறித்து ஜில்லா கலெக்டர் செய்யும் தீர்ப்பே முடிவானதாகும். (7) பஞ்சாயத்து, யூனியன் மன்றம், பாசனக் கட்டுக் கரையில் இரு மருங்கிலும் முப்பது அடிக்குள் எந்தக் காரியத்துக்காகவும் எந்தச் சமயத்திலும் மண்ணேத்தோண்டி எடுக்கக்கூடாது. (8) ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கு மாற்ற லாகியுள்ள கிராம அல்லது நகரப் பாசனக் கட்டு வேல் சம்பந்தமான அலுவல் எதையும் எந்தச் சமயத்திலும் காரணம் எதுவும் கூறமலேயே, அரசாங்கத்தார் அல்ல்து பஞ்சாயத்து சட்டத்தின் 157-வது பிரிவின் கீழ் அதிகாரம் பிரித்துக் கொடுக்கப்பெற்றுள்ள அதிகாரி எ டு த் து ச் செய்யலாம். 芬岁