பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

231

எபன்தை அறிந்த பார்ப்பனன், அப்பொழுதே ஓடி விட்டால் நல்லது என்று எண்ணினான். அவ்வாறே அரக்கன் நீராடி முடிக்கு முன்பே அவன் ஓடி மறைந்து விட்டான். நீராடி முடித்துக் காலீரம் காய்ந்தபின் அரக்கன் பார்ப்பனனைத் தேடிக் கொண்டு வந்தான்.

பார்ப்பனனைக் காணாத அரக்கன் தான் அறி வில்லாமல் தன்னைப் பற்றிய உண்மைகயைக் கூறியதால் அன்றோ அந்தப் பார்ப்பனன் தப்பியோடி விட்டான் என்று எண்ணி வருந்தினான்.

யாரிடம் எதைச் சொல்லுவது என்று ஆராய்ந்து சொல்லாதவர்கள் இப்படித்தான் துன்பமடைவார்கள்.


14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர் செல்ல நேர்ந்தது. புறப்படுமுன் தன் தாயிடம் விடை பெற்றுக் கொள்ள வீட்டுக்கு வந்தான். வெளியூர் போவதென்றால் ஒரு துணை யோடு போ’ என்று தாய் கூறினாள். 'எனக்குத் துணைவரக் கூடியவர்கள் யாரும் இல்லையே’ என்று இளைஞன் கூறினான்.

அதைக் கேட்ட தாய் , ஒரு நண்டைப் பிடித்து ஒரு கலயத்துக்குள் போட்டு இதைத் துணையாகக் கொண்டு போ’ என்று சொல்லிக் கொடுத்தாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு போனான்.

போகும் வழியில் அவன் களைத்துப் போனதால் இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் தங்கினான்.