பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நன்பர்கள்

93


திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்த மான், வெடுக்கென்று துள்ளி எழுந்து ஓடியது. அதை விட மனமில்லாமல் வேடன் துரத்திக் கொண்டு ஓடினான். மானோ காட்டு மரங்களுக்கிடையே, வளைந்து வளைந்து ஓடி ஒரு புதரில் போய், வேடன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. அதற்குள் ஆமை குளத்திற்குள் இறங்கி விட்டது. எலி வளைக்குள் பதுங்கி விட்டது. காகம் மரத்தின் மேல் ஏறியமர்ந்து கொண்டது.

வேடன், ஓடி இளைத்து ஒன்றுமில்லாமல் ஏமாந்து திரும்பினான்.

வேடன் அங்கிருந்து போனபின், காகம், வேடன் போய்விட்டான்!' என்று அறிவித்துக் கரைந்தது.

அந்தக் குரல் கேட்டதும் ஒளிந்திருந்த எலி ஒடி வந்தது. மறைந்திருந்த மான் பாய்ந்து வந்தது. குளத்திலிருந்த ஆமை கரைக்கு வந்தது. நான்கும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன. அந்த நான்கும் ஒன்றுக் கொன்று உற்ற உதவியாக இருந்து பெற்ற இன்பம் பெரிது. அவை வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தின.

நல்லவர்கள் நட்புப்போல் இலாபமானது வேறு எதுவும் இல்லை.