பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் # 93 4 உறுதிப்படுகின்றது. மேலும் நம்மாழ்வாரைப் போல நல்ல ஆன்மாக்களைப் பெறுவதற்காகவே 108 திவ்விய தேசங்களில் கோயில் கொண்டு வந்து போவாரையெல் லாம் சோதிக்கின்றான்' என்ற கருத்தும் இதனை அரண் செய்கின்றது. இதனால் அடிகளாரைப் போன்ற ஒரு வரை ஈசுவரன் பெறுவது அவனுக்கு இலாபம் என்ப தாக நாம் கொள்ளுகின்றோம். (இ) வாளால் மகவுஅரிந்து ஊட்டவல் லேன்அல்லேன்; மாதுசொன்ன சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லேன், தொண்டுசெய்து நாள்ஆறில் கண்இடந்து அப்பவல் லேன்அல்லேன்; நான்இனிச்சென்று ஆளாவது எப்படி யோதிருக் காளத்தி அப்பனுக்கே (3) முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால் செப்புஒது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும் அப்போது கண்கலக் கப்பட வும்.அமைத் தாய்ஐயனே எப்போது காணவல் லேன்திருக் காளத்தி ஈச்சுரனே (4) இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார் அரைக்குஎய் அவலக் குழியரு கேஅசும்பு ஆர்ந்தொழுகும் புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள் பொன்முகலிக் கரைக்கேகல் ஆலின் நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே (5)