பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் {!) மனநிறைவு உடைகோ வனமுண்டு உறங்கப் புறந்திண்ணை உண்டுஉணஇங்கு அடைக்காய் இலைஉண்டு அருந்தத்தண் fைஉண்டு அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டுஇந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (1) வீடு நமக்குத் திருவாலங் காடு விமலர்தந்த ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம் ஓங்குசெல்வ நாடு நமக்குண்டு கேட்டதெல் லாம்தர நல்நெஞ்சமே ஈடு நமக்குச் சொல்லவோ ஒருவரும் இங்கில்லையே (2)

  • 97 4

உடல் வாழக்கைக்கு அனைத்தும் இருப்பதாலும் பரகதிக்கு ஈசன் நாமம் இருப்பதாலும், திருவாலங்காடு நமக்கு வீடாக இருப்பதாலும் நாடு நமக்கு நாடுவன வெல்லாம் நல்குவதாலும் மனநிறைவு பெறுவதாகக் கூறுகின்றார் அடிகள். கண்உண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப் பண்உண்டு பாடச் செவிஉண்டு கேட்கப் பச்சிலையால் எண்உண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே மண்உண்டு போகுதுஐ யோகெடு வீர்இந்த மானுடமே (5) பட்டி-8