பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


நெடுமூச்சை நெட்டித்தள்ளி விட்டு, செந்தில்நாயகம் அங்கிருந்து புறப்பட்டார். கார்ச்சாவியைச் சட்டைப்பையில் திணித்தார்; நடந்தார். அழகின் அற்புதமாக அமைந்து விடுகிற இயற்கைத் தன்மைக்கு ஒரு சவால் போல அமைக் கப்பட்டிருந்த செயற்கையின் கம்பீரமான எழிலைப் பகுதி பகுதியாக ரசித்த வண்ணம் அவர் நடையைத் தொடர்ந்தார். நீலப் பாதரலக் குழல் விளக்குகள் எடுப்பாக எரிந்தன. யாரோ ஒரு சில்க் சட்டை ஆசாமி எதிர்ப்பட்டார். ஸ்டுடியோவில் சில்க் சட்டைகளுக்கா பஞ்சம்: உடனே மகேந்திரன். அந்த ஆளேக் கண்டு பல்லே இளித் தான். இவுங்கதான் ரீமான் செந்தில்நாயகம் அவர்கள். பெரிய பிஸினஸ்காரங்க. லிங்கச் செட்டித் தெருவிலே மூணு தொழில்.ஆஃப்செட் ப்ரிண்டிங் பிரஸ் கடக்குது...காலண்டர் போடுருங்க...புதுடயர்கள் விற்கிருங்க...இன்னம்...” என்று சொல்லுவதற்குள், அந்த ஆசாமி இடைமறித்து, "இங்கே எப்படி?” என்று கேட்க, 'ஷல்ட்டிங்க் பார்க்க வேணும்னு சொன்னுங்க. அழைச்சிட்டு வந்தேன்!” என்று ஆரம்பத் திலேயே சொல்லிக் கொடுத்துவிட்ட அச்சில் அப்படியே சொல்லிவிட்டான். எதிர்ப்பட்ட புள்ளியோ அவ்விருவரையும் ஒரு மாதிரி யாகப் பார்த்துவிட்டு நடையைக் கட்டிவிட்டான். செந்தில்நாயகத்திற்கு என்னவோ போலாகிவிட்டது. "ஸ்லாக்கின் பொத்தான்களைப் பிரித்தார். பூங்காற்று, மேனி யைத் தழுவிற்று. மகேந்திரனே எரிச்சலுடன் பார்த்தார். "இங்கெல்லாம் என்னே இழுக்காதீர் என்றேன்..கேட்க வில்லே! கடுகடுப்பாகச் செப்பினுர். 'ஹி..ஹி' என்று அசடு வழிய கின்ருன் மகேந்திரன். இனம் புரியாக் குழப்பத்தில் அல்லாடிக் கொண்டிருந் தார் செந்தில் நாயகம். அப்போது : கைவளையல்களின் இனிய ஓசையும் காற்சதங்கைகளின் மெல்லிய நாதமும் கேட்கவே அவர் விசையுடன் திரும்பினர்.