பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
178

மேற்கூறிய எனது நண்பர் எனக்குச் செய்த இப்பேருதவிக்கு நான் மிக நன்றியுடையவன யிருக்கிறேன்.

இங்ஙனம்
ஜி. மெக்கன் ஜி. காபன்.

இதன் முதல் பதிப்பு

1838இல் புதுவையில் (களத்தூர் வேதகிரி முதலியாரால் பார்வையிடப் பெற்று) வெளியிடப்பெற்றது.

தமிழ்த்தொண்டு செய்தவருள் யாழ்ப்பாணம் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் சிறந்தவராக வைத்துப் போற்றக்கூடியவராவர். சென்ற நூற்றாண்டில் அவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் சிறந்த சைவர். அவரின் சமயப்பற்றும் மொழிப்பற்றும் அவரது உரை நடையும் "இலக்கண விளக்கம்’ பதிப்பு முன்னுரையால் (1855) நன்கு தெளிவாகும்,

பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாய சோழனை இடித்துரைத்துக் கண்டித்த அருண் மொழித் தேவனைப் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்சுவை பொருட்சுவைகளின் மேற் தம்மாணாக்கர் மனஞ் செலுத்தாவிடத்தன்றாே பரிதாபமடைந்தனர்? பின்னர் அபிஷேகத்தார் மரபிலுதித்துச் சுத்த சித்தாந்த சைவ சமயியாய்ச் சைவ சமயாசாரியராய் எழுந்தருளிய இந்நூலாசிரியர் இயற்றிய நூலும் உரையும் சிறப்புடையனவாகவும் பஞ்சலட்சணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன்தருவனவாகவும் இருக்க; அதனை விரோதித்துப் பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை இச்சித்தல்போல, இரண்டிலக்கணமாத்திரமுடைத்தாய்ச் சமணாசிரியராற் செய்யப்பட்டுள்ள நன்னூலைச்