பக்கம்:பனித்துளி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றாண்டை நோக்கி...

“தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் ஸ்தாபகர் ஸ்ரீ வி. குப்புசாமி ஐயரை நான் பாராட்டுகின்றேன்.’

-மகாத்மா காந்தி ‘நீதிகளைக் கற்பிக்கும் சிறு கதைகளையும், பல நாடகங்களையும், பல மொழிபெயர்ப்புகளையும், இன்னும் பல விஷயங்களையும் எளிய அழகிய நடையில் வெளியிட்டு வரும் அல்லயன்ஸ்ாரை நான் பாராட்டுகின்றேன்.

-மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்

“Books published by Alliance Company are highly Popular Books.”

– Rt. Hon’ble V. S. Srinivasa Sastri

தமிழில் அழகிய புத்தகங்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸாருக்கு நன்றி செலுத்தி அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்.”

-சக்கரவர்த்தி ரீ ராஜகோபாலாச்சாரியார்

‘அல்லயன்ஸ் கம்பெனியார் நல்ல நூல்களை வெளி யிடுவதில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் நாட்டார் தக்க ஊக்கம் தர வேண்டும் என விரும்புகிறேன்.”

-சத்தியமூர்த்தி

மயிலை அல்லயன்ஸ் கம்பெனியாரின் வெளியீட்டுத் திறத்தை ஈண்டு விரித்துக் கூற வேண்டியதில்லை. அதை

நாடறியும். அல்லயன்ஸ் கம்பெனியாரால் வெளியிடப் பெற்ற நூல்கள் யாவும் தமிழ் நாட்டுக்குப் பல வழிகளிலும் பயன் விளைத்து வருவது கண்கூடு. நாட்டு நலங்கருதி

ஒழுங்கு முறையில் உழைக்கும் அவர்களுக்கு நாடு கடமைப் படுவதாக.”

-திரு. வி. க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/5&oldid=682355" இலிருந்து மீள்விக்கப்பட்டது