பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 15 யோகமுறை என்பது, அலைபாய்கின்ற மனது அமைதிபெற, உடம்பில் உள்ள ஆற்றல்கள் சிதையாது, சேர்ந்து திறமைபெற உதவுகிறது. ஓடுகின்ற ஆறானது, கால்வாயாக, வாய்க் காலாகப் பிரிந்து, நீரைத் தந்து, பயிர்களை வளர்க்க உதவுவதுபோல, யோகப் பயிற்சியால் அமைதி பெறுகிற மனமானது, வாழ்வையே உயர்த்தும் வழிகளைத் தந்து, மனிதனை மேம்படுத்துகிறது, மேன்மையில் உலாவ வைக்கிறது. யோகம் என்பதை மிக அருமையாக நாம் விளக்கலாம். வேலை செய்கிறபோது அறிவோடு, நிறைந்து வாழ்க்கையிலே செயல்படுகிறபோது தெளிவோடு இருந்து, நிம்மதியான நினைவுகளோடு வாழ உற்சாகப்படுத்துகிறது என்பதால், யோகப் பயிற்சிகள் நம் உடலை வளப்படுத்தி, மனதை நெறிப்படுத்தி, தெளிவான வாழ்க்கைக்கு நம்மைத் தயார் படுத்துகிறது என்கிற உணர்வுடன். நாம் பயிற்சிகளைத் தொடர்வோம்.