உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரதாயணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பிவந்து சாவூர் சென்று விட்டார்- கரும்பே -நீயும் வா!" என்றழைத்தாள். "என்ன வாங்கி வந்தார்?" என்றான்! "மானம்! மானம்! அழியாத மான"மென்றாள்- "மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக-என்றாள்! வந்துவிட்டான்-குலக்கொழுந்து! குடும்பவிளக்கு எரிந்து கொண்டே, கூறுகின்றாள்- "எதிரிகளின் படையெடுப்பால்-நம் குடும்பம் தழை உதிர்ந்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ! கவலையில்லை- களம் சென்றார் மாண்டார்! ஆனாலும் இந்த, நிலம் உள்ளவரையிலும் 'மானங்காத்தார்' என்ற பெயர் என் மகனே! நீயும் தோளில் பலம் உள்ளவரையில் பகையைச் சாடு! பரணி பாடு! இது உன் தாய்த்திருநாடு!- உடனே ஓடு! எனத் தாவி அணைத்துத் தளிர் மகன் தன்னைச் சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக் காவி படிந்த வாள் கொடுத்துச் சென்று வா மகனே, செருமுனை நோக்கி!* என வாழ்த்திவிட்ட திருவிடத்துக் பூண்டார்! காட்சிதனைப் - போற்றிப் பாடாதார் உண்டோ!- திருமகளே! இந்தப் பூவுலகில்?... புலவர்: (குறுக்கே வந்து) உண்டு! உண்டு! சேர: என்ன? புல: அந்த உண்டு கொழுத்தவர் உண்டு உத்தமா! நம் வீரத்தைப் பழிப்போர் இந்த அவனியிலே உண்டு! சேர: ஆ! புல: வேந்தரும் அரசியும் தனித்திருக்கும் வெள்ளிமாடத்திற்கு வந்திருக்கிறானே என்று வியப்படைய வேண்டாம். இதைவிட வியப்பான செய்தி ஒன்று கூறப் போகிறேன். சேர: புலவரே!... புல: நமது வீரம் பொல்லாத புல்லர்களால் தூற்றப்பட்டது மன்னவா! சேர: தூற்றியவர்கள் இருக்கிறார்களா? புல: இருக்கிறார்கள்! வடநாட்டு மன்னர்கள் வால்நீட்டுகிறார்கள். வேண்: பிறகென்ன? அவர்கள் வாளையா நீட்டுவார்கள்? புல: கனகவிசயர் இல்லாத காலத்திலே இமயத்திலே படை யெடுத்தோமாம்- அவர்கள் ஆளும்போது கால் கால் எடுத்து வைக்கட்டும் பார்ப்போம் என்று கர்ஜிக்கிறார்கள். சேர: நமது வாளைப் பழித்தார்களா? அவர்களைத் தாள் பணிய வைக்கிறேன்! வேண்மாள்... வேலை வந்துவிட்டது, வீரத் துக்குச் சோதனை வந்துவிட்டது! வருகிறேன்! 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரதாயணம்.pdf/48&oldid=1696328" இலிருந்து மீள்விக்கப்பட்டது