மணவறையில் இருத்திசுற்றிப் பிடித்துக் கொண்டு மணமகனின் தங்கையிடம் தாலி தந்து அணங்கினுக்கு மாலையிட அறைந்தார், இந்த அணியாயச் சடங்குக்கு மணமென் ருபேர்? சந்தனந்தேங் காய் பழந்தாம் பூலம் சோமன் தட்சணைகள் பச்சரிசி பொருட்க ளெல்லாம் வந்தமட்டும் முட்டைகட்டிக் குருக்கள்கூட்டம் வழிநடக்கும் ஏப்பமிட்ட நிலையில்; கேற்று அந்தியினில் மணமகனைச் சனிகோ யென்றே அழைத்தகன்ருர் மருத்துவமா மனையை நோக்கி, இந்தநோய்க் கொடிதென்ருர் மருத்து வர்கள் இரவெல்லாம். ஏதேதோ சிகிச்சை செய்தார். மணமான அன்றிரவே மடமான் தன்னை, மது துளிர்க்கும் மலர்ந்தபுது மலரை, இன்ப உணர் வெழுப்பும் எழில் நிறைந்த ஒளிகி லாவை, ஒப்பற்ற கலாநிதியைப் போன்ற அன்புக் குணவதியை, பெண்ணினத்தைக் கொத்தித் தின்னும் கோட்டான்கள் மத்தியிலே தனியே விட்டுப் பிணமானன் மணவாளன்! மணப்பெண் ளுேடு பெற்றேரும் துடிதுடித்தார் புழுவைப் போலே! 97