பக்கம்:பருவ மழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ ! MJJAMJMMSJSMMSMMSMSMMAMAMAMJS இன்பத் தமிழ்க் கவிஞன் இளங்கோ எங்கள் குலத்தலைவன்-அவன் பொன்னடி தன்னை என்றும்-வணங்கிப் போற்றிப் பணிந்திடுவோம்! அண்ணன் அரசுரிமைப்-பெற்றுப்புவி ஆட்சி செயல் முறைமை-என எண்ணித் துறவு நிலை-கொண்ட அவன் ஏற்றத்தைப் போற்றிடுவோம்! திங்களை ஞாயிற்றினை-வான்மழைத் தேவியைக் காவிரியை-எங்கும் பொங்கும் இயற்கையினை-இறையெனப் போற்றிய மாகவிஞன்! பெண்ணின் பெருமையெல்லாம்-உலகில் பேசி முழக்க வந்த-முதல் வண்ணத் தமிழ்க் கவிஞன்-அவன்புகழ் வாழ்த்தி வணங்கிடு வோம்! 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/51&oldid=807770" இலிருந்து மீள்விக்கப்பட்டது