பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிழச் சிங்கம்

வெண்மை யான தாடியுளார்-கொள்கை

விளக்கிப் பேசும் சொற்பொழிவில்

உண்மை யிருக்கும்; பயனிருக்கும்-தமிழர்

உயர்வுக் கான கருத்திருக்கும்!


சூதும் வாதும் செய்பவரைக்-கண்டால்

தூவென் றுமிழ்ந்து தள்ளிடுவார்

சாதி வெறியும் மதவெறியும்-போனால்
தானே நன்மை வருமென்பார்

பழைய புராணம் படித்ததனை-நாட்டில்
பரப்பு வோர்க்குப் பகையாவார்

உழைப்பு முயற்சி பகுத்தறிவு-மிகவும்
உடையோர்க் கன்புத் தாயாவார்!

இறைத்துப் பாய்ச்சும் தண்ணீர் போல்-அவர்

எழுச்சிக் கருத்தும் பயன்தருமே!

நரைத்துத் திரைத்து மூத்திடினும்-தமிழ்
நாட்டுக் குழைக்கும் பெரியாரே!


நேரிய ஒழுக்கம்; பண்புடைமை-நாட்டில்

நிலைபெற் றோங்க வேண்டுமெனும்

சீரிய கருத்தை உடையவராம்-கிழச்
சிங்கம் பெரியார் வாழியவே!