பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19

19 போல் பயமில்லை. அது தெய்வத்தின் சோதனையென்று எண்ணிய வனாய், என் துயரத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு மோட்டார் காரில் ஏறிக்கொண்டு வீடுபோகப்புறப் பட்டேன். பாதிவழி வந்த பிறகு, அகஸ்மாத்தாய் என்கையால் காரின் பக்கத்தைத் தடவ, என் மோதிரம் அதன் துவாரமொன்றில் சிக்கியிருப்பதைக் கண்டு தெய்வாதீனம் என்று தெய்வத்தைப் போற்றியவாரே சந்தோஷத்துடன் அதை மெல்ல எடுத்து அணிந்துக் கொண்டேன். - என் தாயார் எனக்குக்கொடுத்து, மூன்றுமுறை காணாமற்போய், எனக்கு மறுபடியும் சிக்கிய, இச்சிறு மோதிரத்தை நான் அதிகமாக மதிப்பது ஆச்சரிய மல்லவென்று இதை வாசிக்கும் நண்பர்கள் ஒப்புக் கொள்ளுவார்களென்று நினைக்கிறேன். எனக்குப் பிரியமான இம் மோதிரத்தை, என்னால் கொடுக்கப் படும் சிறு ஆஸ்தியில், மிகவும் மதிப்புடைய பொருளாகப் பாவித்துக் காப்பாற்றிவரும்படி, என் குமாரனிடம் சொல்லியிருக்கின்றேன். நான் 1950-வது வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி நான் சன்யாசம் வாங்கிக் கொண்டபொழுது நான் அணிந்திருந்த மற்ற எல்லா ஆபர ணங்களை கழற்றிய போதிலும் இந்த மோதிரத்தை மற்றிலும் கழற்ற வில்லை. ஏனெனில் அதை நான் பொன் மோதிரமாக பாவிக்கவில்லை, அதை என் தாயார் எனக்கருளிய ஆருயிராக பாவிக்கிறேன். இதை பரம்பொருளின் இச்சைப்படி என் தாய் தந்தையர் என்னை தாங்கள் பாதாரவிந்தம் சேர்த்துக் கொள்ளும் சமயம் வரும் பொழுது, என் உடலை காஷ்ட்டத்தில் வைத்து தகனம் செய்யு முன்பு தான் இதை கழற்ற வேண்டுமென்று என் குமாரனுக்கு சொல்லியிருக்கிறேன்.


தா தா கதை (கட்டுக் கதை) ஒரே ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான். அவன் நிரம்பப் பணக்காரனுமல்ல, ஏழையுமல்ல, அவன் மிகவும் தெய்வபக்தி யுடையவன், அவன் இறந்து போகுமுன் தனது இரண்டு குமாரர் களையும் அழைத்து தன் நிலங்கள் சொத்துக்களை எல்லாம் இருவர்க் கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து அவர்களுக்கு அடியிற்கண்ட படி புத்திமதி கூறினான். பிள்ளைகளே நீங்கள் இரண்டு பெயரும் புத்திசாலிகள். உங்களுக்கு நான் அதிகமாக சொல்ல வேண்டியதில்லை இதை ஒன்றை மாத்திரம் என் உபதேசமாகக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டியிருந்தால் ஸ்வாமியைக் கேளுங்கள் அவர் எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை உங்களுக்கு