பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பல்லவப் பேரரசர்



சிம்மவிஷ்ணு காலத்தில் சோழநாட்டின் வடபகுதி யையும் தொண்டை நாட்டின் தென் பகுதியையும் களப்பிரர் ஆண்டுவந்தனர். உறையூர்வரை இருந்த சோணாட்டுப் பகுதியைச் சோழர் ஆண்டனர். திருச் சிராப்பள்ளி சேலம் ஜில்லாக்களிலுள்ள கொல்லிமலைப் பகுதியை மழவர் ஆண்டுவந்தனர். இவர்கள் நாடுகள் பல்லவர் கைப்படுமாயின், தனது நாட்டிற்கும் ஆபத்து உண்டாகலாம். என்று கருதியே பாண்டியன் சிம்மவிஷ்ணுவைத் தாக்கினன். எனினும், சிம்மவிஷ்ணு வெற்றிபெற்றான். பல்லவநாடு புதுக்கோட்டைச் சீமைவரை பரவிவிட்டது. புதுக் கோட்டைச் சீமையை ஆண்டுவந்த கொடும்பாளுர்ச் சிற்றரசர்கள் பல்லவர்க்கு அடங்கியவர் ஆயினர்.

சதுர்வேதி மங்கலங்கள்

சிம்மவிஷ்ணு தன் பெயரால், நான்கு வேதங்களிலும் வல்ல. மறையவர்க்குச் சிற்றுார்கள் பலவற்றைத் தானமாக அளித்தான். அவை சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்க்லங்கள் எனப்பெயர் பெற்றன. இப்பெயர், திருவொற்றியூரை அடுத்த மணலி என்னும் சிற்றுார்க்கு இருந்ததாகத் தெரிகிறது. வட ஆர்க்காடு ஜில்லாவில் சீயமங்கலம் என்று வழங்கும். கிராமம், பழைய காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்று பெயர் பெற்றிருந்தது. கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் இம்மாதிரிப் பெயர் பெற்றிருந்தது.

வைணவன்

‘சிம்மவிஷ்ணு’ என்ற பெயரைக்கொண்டே இவன் வைணவன் என்பதை எளிதில் உணரலாம். “பக்தி