பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பல்லவப் பேரரசர்



தெரிகின்றனவே தவிர, பல்லவன் தோற்றுவிட்டான் என்பதோ, நாட்டை இழந்துவிட்டான் என்பதோ தெரியவில்லை.

போர் நடந்த முறை

இரண்டாம் புலிகேசி முதலில் காஞ்சியைக் கைப்பற்ற முயன்றான்; மஹேந்திரனது கோட்டை மதில் பகைவரால் ஏற முடியாதது. மஹேந்திரன் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான். அவனை வென்று கைப்பிடியாகப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பெருமிதம் கொண்ட புலிகேசி, பல்லவ நாட்டின் தென் எல்லையான காவிரியாறுவரை சென்றான்.

அவன் மீட்டும் திரும்பிக் காஞ்சியை நோக்கி வருவதற்குள், மஹேந்திரவர்மன் பெரும்படையைத் திரட்டித் தயாராகக் காத்திருந்தான்; புலிகேசி காஞ்சிக்கு அருகில் வெற்றித்திமிருடன் அசட்டையாக வந்து கொண்டிருக்கையில் திடீரெனத் தாக்கினன். தனக்கஞ்சிக் கோட்டைக்குள் புகுந்துகொண்ட மஹேந்திரன், எதிர்பாராவிதமாக இங்ஙனம் வன்மை மிக்க படைகொண்டு தாக்குவான் என்று புலிகேசி கனவிலும் கருதவில்லை. புள்ளலூர் என்னும் இட்த்தில் நடந்தது. அது காஞ்சிக்குப் பத்துக்கல்.தொலைவில் உள்ளது. எதிர்பாராத எதிர்ப்பைக் கண்டதும் சாளுக்கியர் படை திகைத்தது. அதனால் அது வெற்றிகரமாகப் போராடக்கூடவில்லை. பல்லவர் படை வீராவேசத்துடன் போராடியது. இறுதியில் மஹேந்திரவர்மன் படை சாளுக்கியர் படையைத் துரத்திச் சென்றது. இரண்டாம் புலிகேசி உயிருடன் சாளுக்கிய நாட்டை அடைந்ததே பெரிதாயிற்று.