பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சிறப்பான ஒன்று, சோதிடம் சொல்வது குற்றம் என்ற சட்டமாகும். இந்தச் சட்டத்தின்படி சோதிடம் பார்க்கும் மூடப்பழக்கம் ஒழிந்து விடும் என்பதில் ஐயமில்லை.”

இந்தச் செய்தியைப் படித்த சிட்டுக் குருவிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன் முகத்தில் புதுப்பொலிவு ஏற்பட்டது. இறக்கைகளில் புதுத்தென்பு ஏற்பட்டது. எண்ணத்தில் புதிய களி வெள்ளம் பொங்கியது.

அன்று முதல் அது நன்றாகச் சாப்பிட்டது. "அரசு வாழ்க! சட்டமன்றம் வாழ்க!” என்று அது வாழ்த்தியது.