உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி றொன்று, வேத ஆகம புராணக்கூற்று! இதில் எது உண்மை, எது தேவை ! என்ற தெளிவு ஏற்பட வேண் டாமா, மாணவருக்கு ! புராணத்தையும், அதே நேரத்தில் புராணக் கருத் தைப் புளுகு என்று எடுத்துக் காட்டிடும் புதுமைக் கருத்தையும் படிக்கவிட்டு, இரண்டையும் இளைஞர் இதயங்களில் குடிபுகவிட்டால், இளைஞர் இதயம், இளைஞரின் தெளிவு, என்னாவது காலத்தால் உளுத்துப்போன, கவைக்குதவாத கண் மூடிக் கொள்கைகளை விட்டுவிடக் கூடாது, என்று ஒரு புறம் போற்றிக்கொண்டு வருவதும், அதே நேரத்தில், வேகமாக வளர்ந்துவரும் பொது அறிவு தந்திடும் புது யுக மறுமலர்ச்சிச் சாதனங்களை வாழ்க்கையில் உப யோகப் படுத்திக்கொண்டும் வாழ்கிறோம். விசித்திர வாழ்க்கை! விசித்திர வாழ்க்கை! விஞ்ஞானமும்-விஞ்ஞானத் திற்கு முரண்பட்ட, நேர்மாறான கருத்துக்கொண்ட, வேதங்களும் ஒன்றாகவே, வளர்க்கப்பட்டு வருகின்றன! வாழ்வுக்குத் தேவையான வசதிகளை, விஞ்ஞான மூலம் பெற்று, புறத்தில், வெளி உருவில் மாறுதல், மறுமலர்ச்சி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் 'அக வாழ்வு' அந்தக் கால, அர்த்தமற்ற அறியாமை வாழ் 55