பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. 2s) * * * * * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் অঙ্গ நிகழ்ச்சியன்று. 1859-லேயே மார்க்ஸ் பொருள் முதல்வாத வரலாற்றுக் கொள்கையை வெளியிட்டார்." இவ்வாண்டில்தான் டார்வினது உயிரினங்களின் தோற்றம் வெளிவந்தது. அகழ்வாராய்ச்சியாளர்களான ஜான் இவான்ஸ், ஃபால்கோனர், ப்ரெஸ்ட்விச் ஆகியோர் பண்டைக்கால மனிதனது வாழ்க்கையை அறிய உதவும் அகழ்வாராய்ச்சிச் சான்றுகளை வெளியிட்டு பிளிஸ்டோஸின் மனிதனைப் பற்றிய விவரங்களை எழுதினர்.” இத்தகைய சான்றுகளிலிருந்து மார்க்கம் எங்கெல்சும் தங்கள் சமுதாய வளர்ச்சி பற்றிய கருத்துக்களை உருவாக்கி வெளியிட்டனர். ஒரு சமுதாயத்தின் அமைப்பு அடிப்படையில் அச்சமுதாயத்தின் உற்பத்தி முறையைப்பொறுத்திருக்கிறது. உற்பத்திமுறை, உற்பத்தியில் பயன்படும் உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்தது. சமுதாயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேவைகளை நிறைவுசெய்து கொள்ளுவதற்காக, சமுதாயத்தின் ஆளுகையில் இருக்கும் தொழில் நுணுக்க சாதனங்களையும், சக்திகளையும் பொறுத்தே உற்பத்திமுறை இருக்கமுடியும். நாகரிக சமுதாயங்களின் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு இக்கொள்கையை அவர்கள் வரையறுத்துக் கூறினார்கள். மார்க்ஸ் எழுத்தறிவில்லாத வரலாற்று முதற்கால சமுதாயங்களின் மாறுதல்களை ஆராயும்பொழுது மார்களது கொள்கையை ஏற்றுக்கொண்டார்.” மார்கன், பொருள் முதல்வாத வரலாற்றுக் கொள்கையை வலியுறுத்தும் சான்றுகளைத் திரட்டித் தந்திருந்தார். மார்கனுடைய சமூக பரிணாமக் கொள்கை மார்க்ஸின் வரலாற்றுக் கொள்கையோடு நெருங்கியதாயிருந்தது. எங்கெல்ஸ் ஒரு சமுதாயம் மற்றோர் சமுதாயமாக மாறுவதை மார்கனது திட்டத்தோடு, உற்பத்தி சக்திகளின்மாற்றம் என்னும் கருத்தை இணைத்தார். இவ்வாறு செய்யும் பொழுது மார்கனது திட்டத்தில் எங்கெல்ஸ் சில திருத்தங்களைக் கொணர்ந்தார். இது தமது கொள்கைக்கேற்றபடி மார்கனது கொள்கையை மாற்றியதாக இல்லை. “ஐரோப்பாவில் வரலாற்று அகழ்வாராய்ச்சி முடிவூகளைப் பற்றிய அவருடைய ஆழ்ந்த அறிவின் ஒளியில் மார்கனது திட்டத்தை மாற்றினார். எனினும் மார்கனது திட்டத்தின் அடிப்படை அம்சங்களை அவர் ஏற்றுக்கொண்டார்.”