பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அங்கந் தாட்டுப் பகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலினத பணியல்லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள்.'

(பாத்திர மர கூறிய கதை 76,72)

தமிழகத்திலிருந்து சாவக நாடு நெடுந்தூரத்திலிருந்தும் தமிழ வாணிகர் அந்தாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர், காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாவக நாட்டில்தான் கிடைத்தன.

கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள்.

'முரசு கடிப்படைய அருத்துறை போகிப்
பெருங்கடல் நீந்திய பரம்வலி யுறுக்கும்
பண்ணிய வினைவர் போல'

(பதிற்று, 8ஆம் பத்து 6)

கடலில் செல்லும் கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு சமயத்தில் நீரில் முழுகுவதும் உண்டு. கடலில் முழுகும் கப்பல், இருள் சூழும்போது மலை மறைவதுபோலக் காணப் பட்டது என்று புலவர் கொல்லன் அழிசி கூறுகிருர் (குறுந், 240:5-7).

கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுந்துப் மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் போதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகிறார்.

‘பன்மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
விலங்கு பிணி நோன் கயிறு அறீஇதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றிச் சாய்ந்துடன்
கடுங்காற்று எடுப்பக் கல் பொருது இரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்'

(மதுரைக் காஞ்சி 375-379)

42