பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வேலைப்பாடு (Exterior Decoration) உள்ளணி (Interior Decoration) என்ற கட்டடக் கலையின் இரு பிரிவுகளில் ஒவியம் உள்ளனியில் அடங்கி விடுகிறது.

அரங்குகள் அமைப்பு

மேடை அரங்கமைத்தல், உள்ளணி செய்தல் போன்ற கட்டடக் கலையின் நுண்ணிய பிரிவுகளிலும் பழந்தமிழர் சிறந்து விளங்கி இருந்ததற்கு நூற் சான்றுகள் கிடைக்கின்றன. திரைச்சீலை, அரங்க நிர்மாணம் பற்றிய விவரங்கள் பலவும் தெரிய வருகின்றன.

இவை பற்றிச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் பல செய்திகளைக் காணமுடிகிறது.

பழந்தமிழர் அமைப்பில் இவ்வாறு நாட்டியம், நாடகம், கூத்து முதலியன நிகழும் கட்டட ஏற்பாடு இருபிரிவுகளை உடையதாயிருந்தது.

கலைஞர் நின்று நிகழ்த்தும் இடம் அரங்கு எனவும், சுவைப்போர் இருந்து காணுமிடம் அவை எனவும் அவை யரங்கு எனவும் கூறப்பட்டன. 15

அரங்கு அமைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ‘மனையடி சாஸ்திரம் பின்னாளில் கூறும் அதே நிலைகள் சிலம்பிலும் வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்க மளக்கும்
கோலள விருபத்து நால்விரலாக
ஏழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத் துறுப்பின தாகி
உத்தரப் பலகையோடரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக