பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



ஈ. 80,000 தண்டங்கள் சுற்றளவு கொண்ட் கிராமம்.
உ, 1,00,000 தண்டங்கள் சுற்றளவு கொண்ட கிராமம்.

இந்தச் சுற்றளவிலும் கூட முழுப்பரப்பிலும் வீடுகளைக் கட்டிவிட முடியாது.

இதில் 20இல் ஒரு பாகமே வீடுகள் கட்டவும், கட்ட டங்கள் நிறுவவும் உரிய பகுதி.11

இப்படிக் குடியிருப்புக்கு ஒதுக்கப்படும் பகுதி குடும்ப பூமி என்று அழைக்கப்படும்.

எஞ்சிய இடம் விளை நிலங்கள், நீர் நிலைகள், ஏரி, குளம், மேய்ச்சல் நிலம், பயன்தரும் (காற்றோட்டமுள்ள) நல்ல மரஞ்செடி கொடிகள் இருக்க, தோப்புத் துரவுகள் அமைய ஒதுக்கப்படும்.12

இங்கே தமிழரின் ஊரமைப்பில் உள்ள அழகும், அறிவியலும் கவனிக்கப்பட வேண்டும். சுற்றுப்புறத் தூய்மை (Ecology) அழகு, பசுமை, தண்ணீர் வசதி ஆகியவற்றுக்கு ஒரு குறைவும் வரலாகாது என்று பத்தொன்பது பங்கு இம்முக்கியப் பிரிவுகளுக்கு ஒதுக்கி, ஒரு பங்கே கட்டடங்க்ளுக்கு ஒதுக்கியிருக்கும் நுணுக்கம் மிகப் பெரிதும் பாராட்டத் தக்கது.

இன்று மரம்,செடி கொடிகளுக்கும், நீர் நிலைகளுக்கும் நல்ல காற்றோட்டத்திற்கும் கூட இடமே விடாமல், கிடைக்கிற ஒவ்வொரு பகுதியையும் கட்டடக்காடு செய்து விடும் அநாகரிகத்தைக் காண்கிறோம். அதே சமயம் பழைய நகரமைப்பிலுள்ள இந்தப் பகுதி நம்மை வியக்கச் செய்கிறது.

அக்கால ஊரமைப்பில் மக்கள் வசிப்பதற்குரிய ஊர்கள். ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டன.13 அவையாவன: