பக்கம்:பழைய கணக்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

கரும்புச் சோகையும், அழுக்கு வெல்லப் பாகும் சாப்பிட்டதன் விளைவாய் அதற்கு நினைவு தப்பிப் போயிற்று. காலை உதைத்துக் கொண்டிருந்த மாடு அன்று மாலைக்குள் செத்துப் போயிற்று. மாமாவுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்பாவும், அம்மாவும் கலங்கிப் போனார்கள். எனக்கோ மாமாவைப் பார்ப்பதற்கே தயக்கமாயிருந்தது.

மிகமிக உற்சாகமாக, இனிமையாகத் தொடங்கிய அந்தக் கரும்புச் சாகுபடி சீசன் கடைசியில் பெரும் சோகத்தில் முடிவடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/150&oldid=1146142" இலிருந்து மீள்விக்கப்பட்டது