உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம் 37 அலைந்தாராம்.. பதினான்கு ஆண்டுகளய்யா,பதினான்கு ஆண்டுகள் - ஒன்றல்ல இரண்டல்ல, பதினான்கு ஆண்டுகள் கானகவாசம் நம் ஐயன் இராமபிரானுக்கு-மரவுரி-கனியும் காயும் உணவு - தரை தான் பஞ்சணை.... கல் மனமும் கரையுமே, ராமகாதை கேட்டு 'ஆமாம்-முன்பு! இப்போது, மக்கள், ஸ்ரீராமர் அடவி சென்றது, அங்கு ஈரேழாண்டு வாசம் செய்தது எல்லாம், அவருடைய தகப்பனாரின் வாக்கைக் காப்பாற்றத்தான்- மக்களுக்காக அல்லவே - புத்தர், மக்களுக்காக அல்லவா அரச போகத்தைத் துறந்தார், என்று கேட்கிறார்கள் கேட்பார்களய்யா, கேட்பார்கள்! அவர்களின் நாக்கை அறுக்கத்தக்க வீரர்கள் இல்லை இப்போது அதனால் கேட்கிறார்கள் F கானகத்திலே கஷ்டம் அனுபவித்தான பிறகு, ராமபிரான், நாடு திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டு சுகப்பட்டார் - புத்தர், துறவியானவர், துறவியாகவே இருந்து விட்டார் - இது வேறு மக்கள் மனதை மயக்கி விடுகிறது....." "மயக்கும். மயக்கும்! எவ்வளவு காலத்துக்கு பதைப் பார்த்து விடுகிறேன்...' என் "ஒவ்வொரு மண்டலமாகப் பரவுகிறது புதிய மார்க்கம்... "இங்குமட்டும் என்னவாம்! நேர்த்தியான யாகம் நடத்தி எவ்வளவு காலமாகிறது-ஏதோ ஆலய பூஜைகள் நடக்கின்றன - வேறு என்ன விசேஷம் நடக்கிறது...?" "மன்னனிடம், கூறினேன் - ஆகட்டும் பார்ப்போம் இழுத்தாற்போலத்தான் பேசுகிறார்... செலவு அதிகமாகுமோ என்று ஆயாசப்படுகிறார்..." என்று "காமக் கூத்தாடமட்டும் காசைக் கரியாக்கத் தயங்கு வதில்லை - கடவுள் காரியமென்றால், கையை விரிக்கிறார்.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/38&oldid=1637224" இலிருந்து மீள்விக்கப்பட்டது