பக்கம்:பாடுங்குயில்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையால் வந்த மயக்கம்

இசையால் வந்த மயக்கமடி-உன் இன்பமும் என்னுளம் மறக்குமடி

-இசையால்

பசியால் இல்லை பாயோ தொல்லை பாலும் பழமும் பார்ப்பதும் இல்லை

-இசையால்

பொருளும் உணர்வும் பொருந்திய பாடல் பொழுதெலாம் கேட்டால் போகுமே வாடல்

இரவும் பகலும் என்மனம் நாடும் எத்தனை எத்தனை இன்பங்கள் கூடும்

-இசையால்

குழலோ யாழோ கொடுத்திடும் ஒலியால் கோதைநின் வாயிதழ் படைத்திடும் குரலால் அழகோ வியமே அல்லல்கள் பறக்கும் ஆயிரம் பாடல்கள் என்னிடம் பிறக்கும்

-இசையால்

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/130&oldid=594005" இலிருந்து மீள்விக்கப்பட்டது