இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையால் வந்த மயக்கம்
兴
இசையால் வந்த மயக்கமடி-உன் இன்பமும் என்னுளம் மறக்குமடி
-இசையால்
பசியால் இல்லை பாயோ தொல்லை பாலும் பழமும் பார்ப்பதும் இல்லை
-இசையால்
பொருளும் உணர்வும் பொருந்திய பாடல் பொழுதெலாம் கேட்டால் போகுமே வாடல்
இரவும் பகலும் என்மனம் நாடும் எத்தனை எத்தனை இன்பங்கள் கூடும்
-இசையால்
குழலோ யாழோ கொடுத்திடும் ஒலியால் கோதைநின் வாயிதழ் படைத்திடும் குரலால் அழகோ வியமே அல்லல்கள் பறக்கும் ஆயிரம் பாடல்கள் என்னிடம் பிறக்கும்
-இசையால்
126