பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 9 அவர் அவற்றைப் பெற்றுக்கொண்டு கையெழுத் திட்டு அனுப்புவதற்காக வைத்திருந்தார். இச் சமயத்தில் அரசியலார் டேவிட்சனை வேற்றுாருக்கு மாற்றிவிட்டனர். விடைபெற்றுச் சென்ற டேவிட் சன் சமயப்பூசல் தொடர்பான மொழிபெயர்ப்புக் கட்டுகளையும் தம்முடன் எடுத்துச் சென்ருர்: ஊருக்குப்போனதும் அனைத்திலும் கையெழுத்திட்டு மேலிடத்திற்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந் தார். சென்ற இடத்திலே எதிர்பாரா வகையில் டேவிட்சன் இறந்துவிட்டார். அதளுல் மொழி பெயர்ப்புக் கட்டுகள் மேலிடத்திற்கு அனுப்பப் படாமல் டேவிட்சன் பெட்டிக்குள் சிக்கிவிட்டன.) டேவிட்சனுக்குப் பிறகு கிரீன்வே என்பவர். நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் உயர் குணங்கள் இல்லாதவர்; உண்மையையும் உழைப் பையும் மதியாதவர். இச் சமயத்தில் மாநில நீதி மன்றத்தில் அக் கலக வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது மாவட்ட நீதி மன்றத்திலிருந்து மொழிபெயர்ப்புக் கட்டுகள் வாராமை கண்டு, காலத் தாழ்விற்குக் காரணம் என்ன என்று மேலிடத்தார் எழுத்துமூலம் கேட்டனர். மேலிடத்தினின்று கேட்டு வந்ததை வைத்துக்கொண்டு, கிரீன்வே எவ்வித விசாரணையு மின்றி வேதநாயகர்மீது குற்றஞ் சுமத்தி, அவரை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். வேதநாயகர் அவற்றை மொழிபெயர்க்கவில்லையென்றும் அதனல் காலத் தாழ்வு ஏற்பட்டதென்றும், ஆதலிளுல் அவரை வேலையிலிருந்து விலக்கிவிட நேரிட்ட