பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை 1947-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைவருமே, நம் நாடு விடுதலை பெற்ற பிறகு பிறந்தவர்களே. தங்கள் தாய், தந்தையரைப்போல் அடிமை நாட்டிலே பிறக் காமல், சுதந்திர நாட்டில், சு. த ந் தி ர மக்களாய்ப் பிறந்தவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு. ஆயினும், விடுதலை வாங்கித் தந்த காந்தித் தாத்தாவை நேரில் பார்க்கவில்லையே அவர் வாழ்ந்த காலத்தில் வாழக் கொடுத்து வைக்கவில்லையே! என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. - * மகாத்மாவை நேரில் பார்க்காத போனலும், அவர் வாழ்ந்த காலத்தில் வாழாத போனுலும், அவர் பிறந்த மண்ணிலே நாமும் பிறந்தோம் என்ற பெருமை இந்திய மக்கள் அனைவருக்குமே உண்டு. ஆனல், அத்தகைய பெருமை பேசுவதோடு மட்டும் நின்றுவிட்டால், என்ன பயன் ? மகாத்மா காந்தி நம் எல்லோரையும் போலவே பிறந்தார்; வளர்ந்தார்; சிறுவயதில் சில தவறுகளும் செய்தார். ஆயினும், செய்த தவறுகளே உணர்ந்து பெரிதும் வருந்தினர்; மனம் திருந்தினர்; படிப் படியாக உயர்ந்தார்: உலகம் போற்றும் உத்தமராகத் திகழ்ந்தார். உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்.தெய்வம் உண்மை யென்று தான்.அறிதல் வேணும். வயிர முடைய நெஞ்சு வேணும்.இது வாழும் முறைமையடி பாப்பா. 9