பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை எதுவுமே உண்ணவில்லை-என்ருல் அருமை மகன்காங்தி வாடிடுவார். என்னதான் அப்போது செய்திடுவார் ?-அதை எடுத்துகான் கூறுவேன் ; கேட்டிடுவாய். வாசலி லேவந்து கின்றிடுவார்-அவர் வானத்தை அண்ணுந்து பார்த்திடுவார். ஆசை யுடன்அவர் காத்திருந்தும்-மேலே ஆதவன் எளிதில் வருவதில்லை. சூரியன் ஒருவேளை தெரிந்ததெனில்-உடன் துள்ளிக் குதித்துள்ளே ஓடிடுவார். ஆருயிர் அன்னையைக் கையுடனே-அவர் அழைத்துக் கொண்டேஓடி வந்திடுவார். 26