பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி மகான் கதை ஆசிரியர் கலைமணி உயர்திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் வாழ்த்து பாட்டினில் காந்தி கதைபாடி-தமிழ்ப் பண்பு நிறைந்த கவிபாடி, காட்டினில் பொய்கள் கலிங்தோடி-ஒரு நல்ல பரம்பரை உருவாக, அள்ளிக் குடித்திடும் நீர்போலே-மிகத் தெள்ளத் தெளிந்த மொழியாலே, பிள்ளைக்குப் பாலுடன் புகட்டிடவே-அழ வள்ளியப் பாகவி பாடிவிட்டார். வள்ளியப்பா பாப் பள்ளியப்பா-அதில் வாசித்த வன்ஒரு புள்ளியப்பா பிள்ளைக்கெல் லாம்விடி வெள்ளியப்பா-அது பெத்தவங் களுக்குத் தங்கமப்பா. அன்னையர் இதனைப் படித்துவிட்டு-கல்ல அமுதுடன் சேர்த்தே ஊட்டிடலாம். ஆராரோ பாடிடும் கேரத்திலே-தொட்டில் ஆட்டிஇப் பாட்டைப் படிச்சிடலாம். 5